Thursday, March 4, 2010

துளித்துளியாய் நழுவுதடி... :(


மெல்ல உருகும்
மெழுகை போல்
உன் மௌனம்
கலந்த விழியால்
உயிரும் உருகுதடி...

சிறிது சிறிதாய்
சிறை பிடித்தாய்
சிந்தனை செய்தால்
சிலிர்த்து போகிறது
உன்னோடு என் நாட்கள்...

மரத்தின் நிழலில்
இளைப்பறி செல்லும்
சராசரி வழிப்போக்கனாய்
கண்முன்னே கடந்து சென்றது
நாம் கொண்ட காதல்...

சிறு சிறு சண்டைகளும்
சீரான புன்னகையும்
சிற்றூந்து பயணமும்
சிதிலமடைந்த காதலால்
துளித்துளியாய் நழுவுதடி... :(

1 comment:

  1. சிறு சிறு சண்டைகளும்
    சீரான புன்னகையும்
    சிற்றூந்து பயணமும்
    சிதிலமடைந்த காதலால்
    துளித்துளியாய் நழுவுதடி... :( //

    super annaa

    ReplyDelete