Saturday, April 10, 2010

எதிரொலி கேட்டு...



தனிமையை விழுங்கி பரிகசிக்கும் நினைவுகள்,
நித்தமும் நம்பிக்கையுடன் உனக்கான எதிர்நோக்கல்...

வழிபோக்கர்களான எண்ணோட்டங்களினூடே,
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் நழுவும் சிறு துளிகள்..

தீயினின் நடுவே வாடும் மலராய் மனமும்,
மெல்ல கருகும் சருகாய் நம்பிக்கை துளிரும்.....

கட்டுக்கடங்கா காட்டு வெள்ளமென துளிகளினூடே,
திகைத்து நின்றேன் ரணமான குரலின் எதிரொலி கேட்டு...!

Tuesday, April 6, 2010

பிரியமான தோழி..!





உடைந்து போனால்
தன்னிலை மறந்து
ஓடோடி வருவாள்..!

தோல்வியால் சரிந்தால்
தோல் கொடுத்து
மனம் தேற்றுவாள்..!

விழும்முன் எச்சரிப்பாள்
விழுந்த பின்
தாங்கிப் பிடிப்பாள்..!

கண்ணிமைக்கும் நேரத்தில்
(நம்பிக்)கை கொடுத்து
ஏற்றி விடுவாள்..!

குழம்பி நின்ற
சமயத்தில் துணிவு
தந்து துயர் துடைப்பாள்..!

காணாமல் போனால்
தன் கண்ணீரால்
கண்டெடுப்பாள்..!

சிறுபிள்ளையாய்
அடம் பிடித்தால்
அடியும் கொடுப்பாள்..!


அவள் என் பிரியமான தோழி தான்..!

நீ..! நான்..! நிலா..! ;)




என்னை கண்ட
மகிழ்ச்சியில்
வளர்பிறையாய் நீ..!

உன்னை கானா
சோகத்தில்
தேய்பிறையாய் நான்..!

பகல் பொழுதில்
கண்களுக்கு
அகப்படாமல் நீ..!

இரவு முழுதும்
உனை பார்த்து
ரசிக்கும் நான்..!

அம்மாவிடம் நிலா
சோறு கேட்டு
அடம்பிடிக்கும் நீ..!

நிலா நிலா ஓடிவா
என்று ஓயாமல்
உன் நினைவோடு நான்..!

இப்படி எதிரும் புதிருமாய்
சிந்திக்கும் நம்மை கண்டு
அமாவாசையில் ஒளிந்திருந்து
கேலி செய்யும் நிலா ..........! ;)

Thursday, April 1, 2010

மௌனித்த மனம் :)



சோர்வு கலந்த
குரல்கள் கேட்டு
மௌனித்த மனம்

அரவணைக்க தோள்கள்
இருந்தும் தனிமை
வேண்டும் உள்ளம்

காணத் துடிக்கும்
விழிகளுக்கு
ஆறுதலான துளிகள்

ஆழ்ந்த சுவாசத்தினூடே
அமைதியும் செல்ல
அதையே விரும்பும் இதயம்

ஆழ்மனத்தின் ஓரத்தில்
சிறு நம்பிக்கை துளிர்
விட்டு புன்னகைக்க

இதுவரை மௌனித்த
மனம் எழுந்து நின்று அடுத்த
பயணத்திற்கு ஆயத்தமானது..!