Thursday, April 1, 2010

மௌனித்த மனம் :)



சோர்வு கலந்த
குரல்கள் கேட்டு
மௌனித்த மனம்

அரவணைக்க தோள்கள்
இருந்தும் தனிமை
வேண்டும் உள்ளம்

காணத் துடிக்கும்
விழிகளுக்கு
ஆறுதலான துளிகள்

ஆழ்ந்த சுவாசத்தினூடே
அமைதியும் செல்ல
அதையே விரும்பும் இதயம்

ஆழ்மனத்தின் ஓரத்தில்
சிறு நம்பிக்கை துளிர்
விட்டு புன்னகைக்க

இதுவரை மௌனித்த
மனம் எழுந்து நின்று அடுத்த
பயணத்திற்கு ஆயத்தமானது..!

No comments:

Post a Comment