Tuesday, April 6, 2010
நீ..! நான்..! நிலா..! ;)
என்னை கண்ட
மகிழ்ச்சியில்
வளர்பிறையாய் நீ..!
உன்னை கானா
சோகத்தில்
தேய்பிறையாய் நான்..!
பகல் பொழுதில்
கண்களுக்கு
அகப்படாமல் நீ..!
இரவு முழுதும்
உனை பார்த்து
ரசிக்கும் நான்..!
அம்மாவிடம் நிலா
சோறு கேட்டு
அடம்பிடிக்கும் நீ..!
நிலா நிலா ஓடிவா
என்று ஓயாமல்
உன் நினைவோடு நான்..!
இப்படி எதிரும் புதிருமாய்
சிந்திக்கும் நம்மை கண்டு
அமாவாசையில் ஒளிந்திருந்து
கேலி செய்யும் நிலா ..........! ;)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment