Saturday, April 10, 2010
எதிரொலி கேட்டு...
தனிமையை விழுங்கி பரிகசிக்கும் நினைவுகள்,
நித்தமும் நம்பிக்கையுடன் உனக்கான எதிர்நோக்கல்...
வழிபோக்கர்களான எண்ணோட்டங்களினூடே,
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் நழுவும் சிறு துளிகள்..
தீயினின் நடுவே வாடும் மலராய் மனமும்,
மெல்ல கருகும் சருகாய் நம்பிக்கை துளிரும்.....
கட்டுக்கடங்கா காட்டு வெள்ளமென துளிகளினூடே,
திகைத்து நின்றேன் ரணமான குரலின் எதிரொலி கேட்டு...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment