
பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்,
ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
தோழர்களே இந்த கலையை பற்றி என் பார்வையில் தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்..!
நன்றி அரங்கேற்றம்...!பாதத்தில் சலங்கை கட்டி
பட்டாடை தான் உடுத்தி
அரிதாரம் பூசி அவதாரமும் ஆகி
நல்லருள் வேண்டி நாட்டியம் ஆட
நம்பி வந்த எனை காப்பாய் தில்லையம்பலனே..!