Tuesday, April 6, 2010

பிரியமான தோழி..!





உடைந்து போனால்
தன்னிலை மறந்து
ஓடோடி வருவாள்..!

தோல்வியால் சரிந்தால்
தோல் கொடுத்து
மனம் தேற்றுவாள்..!

விழும்முன் எச்சரிப்பாள்
விழுந்த பின்
தாங்கிப் பிடிப்பாள்..!

கண்ணிமைக்கும் நேரத்தில்
(நம்பிக்)கை கொடுத்து
ஏற்றி விடுவாள்..!

குழம்பி நின்ற
சமயத்தில் துணிவு
தந்து துயர் துடைப்பாள்..!

காணாமல் போனால்
தன் கண்ணீரால்
கண்டெடுப்பாள்..!

சிறுபிள்ளையாய்
அடம் பிடித்தால்
அடியும் கொடுப்பாள்..!


அவள் என் பிரியமான தோழி தான்..!

No comments:

Post a Comment