Tuesday, March 30, 2010

வார்த்தைகளின்றி...!


கண்ணிருந்தும்
பார்வையில்லா
ஒரு வாழ்க்கை.!


பல நேரங்களில்
குரல் கேட்டு
குதூகலிக்கும்

உள்மனம்

சில நேரங்களில்
மட்டும் ஏனோ
குமுறி அழும்.!


குரல் கேட்டு
சில துளி
எட்டிப் பார்க்க

மறைக்க முயன்றும்
முடியாமல்
தோற்றுப் போனேன்

ரணமான மனதோடும்
வறண்ட நாவோடும்
பதில் கூற வார்த்தைகளின்றி...!

1 comment:

  1. வளைகுடாவின் வருத்தங்களை வர்ணித்தாய் .
    வார்த்தை இல்லை ! வாழ்க்கை !

    ReplyDelete