
முகம் தெரியா
முன்னிரவில்
முப்பது நிமிடம்
குளிர்ந்த காற்றோடு
நிசப்தத்தின் அரவணைப்பில்
நிழல்களின் சங்கமம்
நிலவொளியின்
நீளும் கதகதப்பில்
நம் தனிமை (நீ, நான் & நிலா)
மௌனமான
மனதின் ஓரம்
சிறு சலனம்
எப்படி கேட்பது
என்று ஒரு வித
தடுமாற்றம்
நீயே கேட்பாய்
என்று ஒரு
எதிர்பார்ப்பு
கடைசியில் மௌனம்
கலைத்து நானே
படபடத்து ஆரம்பித்தேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரு நூறுரூபாய்
கைமாற்று
வேண்டும் என்று
இருந்தும்
உன் மௌனம்
கலையவில்லை
ஒருவழியாக
சிறுது நேரத்தில்
உன் பதில்
கடன்
நம் காதலை
முறிக்கும் என்று..!
கடன்
ReplyDeleteஅன்பை
முறிக்கும்
ஆதலால்
நான் குடுத்த
முத்தங்களை
திருப்பி
கொடுத்து
விடு .... :D :P