
மண்ணில் மகிழ்ச்சி ஒன்றே
உயர்ந்த குறிக்கோள் என
வாழ்ந்த வாழ்க்கையின்
இடையில் உணர்த்தினாய்..!
நான் அறியா என்னுள்
அகிம்சையாய் அடம்பிடித்து
பிரிவின் கொடுமையை
வாழ்வின் இறுதிவரை..!
மிக அருகில் இருந்தும்
அரவணைக்க தவரியவனை
வெகு தொலைவில் நின்று
ரசிக்க வைத்தாய் உன் அன்பால்..!
ஆட்டம் போட்ட கால்களும்
அலுத்துப்போய் அனுதினமும்
உன் அன்பை எதிர்நோக்கி
அமைதியாய் தனிமையில்..!
தொல்லையாய் நினைத்த
உன் நினைவு கூட இன்று ஏனோ
கும்மாளமாய் குதூகலிக்கிறது
அருகில் உன் வரவை எண்ணி..!
இப்பொழுது மட்டும் ஏனோ
தெரியவில்லை காரணம் அறியா
உள் மனமும் கண்டும்காணாமல்
கண்சிமிட்டுகிறது உன் பெயர் சொல்லி..!
அருமை அண்ணா
ReplyDelete