Friday, March 19, 2010

உண்மை தான் :)


மழலை மொழியில்
உலகை மறந்தேன்..!

பிஞ்சு கால்கள்
பட்டதும் பூரித்தேன்..!

மென்மையான ஸ்பரிசம்
தொட்டு மனம் மகிழ்ந்தேன்..!

கள்ளமில்லா சிரிப்பில்
கடவுளை கண்டேன்..!

என்று நீ சொன்ன வரிகள்
உண்மை தான் அம்மா..!

இன்று தாயானதால்
அனைத்தும் உணர்ந்தேன்..!

No comments:

Post a Comment