
மழலை மொழியில்
உலகை மறந்தேன்..!
பிஞ்சு கால்கள்
பட்டதும் பூரித்தேன்..!
மென்மையான ஸ்பரிசம்
தொட்டு மனம் மகிழ்ந்தேன்..!
கள்ளமில்லா சிரிப்பில்
கடவுளை கண்டேன்..!
என்று நீ சொன்ன வரிகள்
உண்மை தான் அம்மா..!
இன்று தாயானதால்
அனைத்தும் உணர்ந்தேன்..!
எனது கிறுக்கல்கள்....!:)
No comments:
Post a Comment