Monday, March 29, 2010

கடன்..!




முகம் தெரியா
முன்னிரவில்
முப்பது நிமிடம்

குளிர்ந்த காற்றோடு
நிசப்தத்தின் அரவணைப்பில்
நிழல்களின் சங்கமம்

நிலவொளியின்
நீளும் கதகதப்பில்
நம் தனிமை (நீ, நான் & நிலா)

மௌனமான
மனதின் ஓரம்
சிறு சலனம்

எப்படி கேட்பது
என்று ஒரு வித
தடுமாற்றம்

நீயே கேட்பாய்
என்று ஒரு
எதிர்பார்ப்பு

கடைசியில் மௌனம்
கலைத்து நானே
படபடத்து ஆரம்பித்தேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒரு நூறுரூபாய்
கைமாற்று
வேண்டும் என்று

இருந்தும்
உன் மௌனம்
கலையவில்லை

ஒருவழியாக
சிறுது நேரத்தில்
உன் பதில்

கடன்
நம் காதலை
முறிக்கும் என்று..!

1 comment:

  1. கடன்
    அன்பை
    முறிக்கும்
    ஆதலால்
    நான் குடுத்த
    முத்தங்களை
    திருப்பி
    கொடுத்து
    விடு .... :D :P

    ReplyDelete