
பருவமழையால் பள்ளி விடுமுறை
நம் தொல்லைகள் தாங்காமல்
அன்னையால் வீட்டின் கதவுகள்
பூட்டப்பட்டு சிறைபட்டோம்
என்று வேதனைப்பட்ட நாட்கள்
யாரும் இல்ல சமயத்தில்
வீட்டின் சன்னல் கம்பிகள் வழியே
மழையுடன் கை குலுக்கி மகிழ்ந்து
வீதியில் போவோரை வேடிக்கை பார்த்தோம்
சிறிது நேரத்தில் அறையில்
கட்டிலில் தலையனை போர்வைக்காக
அண்ணனுடன் சண்டையிட்டு
அன்னையிடம் அடியும் வாங்கி
அழுது தீர்த்து களைத்து போய்
உணவு உண்ண அடம் பிடித்து
ஒரு வழியாய் சமாதானம் அடைந்து
ஊட்டிய உணவை உண்டு முடித்து
இடை விடாத மழையின் நடுவே
குளிரும் மழையின் சாரலில்
மழைநீர் தேங்கி நிற்கும் முற்றத்தில்
காகித கப்பலிட்டு மனம் மகிழ்ந்தோம்
கத்திக்கப்பல், பறக்கும்க்கப்பல்,
புகைக்கப்பல், நீர்மூழ்கிக்கப்பல்
என்று நம் சொந்த தயாரிப்பில்
முற்றத்தில் போட்டியிட்டோம்
இனியும் வருமோ அது போல்
ஒரு இனிய மழைக்காலம்....!!
ungal kavithai varigal antha kaalangalin mun kondu chekirathu annaa en ninaivugalai... :)
ReplyDeletesuberb ... :)
நன்றி தம்பி :)
ReplyDelete