Tuesday, December 22, 2009

என் புலம்பல்..!


நிம்மதியில்லா வாழ்க்கை
மக்களின் நீண்ட மரண ஓலம்
பினக்குவியல்களுக்கிடையில்
புன்னைகைக்கும் தலைவர்கள்..!

பிணம் தின்னும் கூட்டத்தில்
தமிழின தானைத்தலைவன்
பிள்ளைகளுக்காக ஓடியவன்
பிஞ்சு உயிர்களுக்காக அல்ல..!

கற்பிழக்கும் கன்னியரின்
மதக்கடவுள்கள் எங்கே
முப்பத்து முக்கோடி தேவர்களில்
ஒருவன் கூட இல்லையா..!

தமிழச்சியின் சதை தின்னும்
ஈன சிங்கள ஓநாய்களே
கௌதம புத்தனின் போதனைகள்
உலகத்திற்கு மட்டுமல்ல உனக்கும்..!

தமிழனை தமிழனாக அல்ல
ஒரு சாரசரி மனிதனாக பார்
விரைவில் வருவேன் உன்னை
வதைத்து எம்மக்களை மீட்க்க..!

1 comment:

  1. விடிந்த பின் எழுவோம்
    என்ற நம்பிக்கையில் தான்
    உறங்க செல்கின்றோம் ...

    ReplyDelete