Tuesday, December 22, 2009

நண்பா வா..!


விதியென்று மதியிழந்து தவித்திடாதே
விதியை உன் மதியால் வென்று விழித்திடு..!

எதிரியின் சூழ்ச்சியில் ஏமாந்துவிடாதே
எட்டிபிடித்தால் நிலவும் உன் கையில் எழுந்திடு..!

புண்பட்டு நொந்தாலும் புலம்பாதே
புத்துணர்ச்சியுடன் புதுப் புயல் போல் புறப்படு..!

நின் நிலை நினைத்து நின்றிடாதே
நிச்சயம் ஒருநாள் நிலைத்திடுவாய் நிமிர்ந்திடு..!

2 comments: