
தனிமையில் இருக்கையிலே தங்கமே
உன் சிரித்த முகம் மனதிலே தெரியுதே...!
பசிக்கவும் இல்லை உறக்கமும் இல்லை
பாடாய் படுத்துதே பாழாய் போன உன் நினைவு
பார்ப்பவரெல்லாம் கேலி செய்யும் வண்ணம்...!
பக்கத்தில் நின்றவன் கூட முறைக்கின்றான்
உன் பெயர் சொல்லி அவனை அழைத்ததால்...!
கணிப்பொறியின் கடவு சொல் கூட புனிதமானது
என்னை களவாடிய உன் பெயர் வைத்ததால்...!
யாரேனும் கடவு சொல் கேட்டால் மகிழ்ச்சியோடு
உன் பெயரை பலமுறை உதடுகளால் உச்சரிக்கின்றேன்...!
தொலைபேசியில் எனக்கு பதிலாய் தவறி உன் பெயர் சொல்லி
சிரிப்புடன் எனை நானே தலையில் அடித்துக்கொள்கின்றேன்...!
தனிமையில் சிரித்து பேசினேன் உன் நினைவினிலே
உனக்கு என்ன ஆகிட்டு என்று எந்நேரமும் எனை
கேட்க்காத ஆள் இல்லை திட்டாத நாள் இல்லை (உன்னை பற்றி)...!
என்ன சொல்லுவேன் ஒன்றுமே புரியாத அவர்களுக்கு
மனதை திருடிவிட்டாய் என்றா ? அல்லது என்னையே என்றா...?
:-)
ReplyDeletesoopperrrrrrr.......
superbbbbb... :)
ReplyDeletethanks friends ;) :)
ReplyDelete